Sunday 31 January 2016


நாடாண்ட சமுதாயம் சில சுயநலக்காரர்களால் அடிமைப்பட்டு போனது. இப்போதும் கூட சில சுயநலமிகள் ஜாதியையும், சமுதாய மக்களின் பின் பலத்தையும் பயன்படுத்தி முன்னுக்கு வருகிறார்கள். வந்த பின், அவர்கள் குடும்பத்தை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். ஆனால் சமுதாயத்திற்கும், சமுதாய மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. இதுதான் நாடார் சமுதாயத்துக்கு பெரிய துரதிருஷ்டம். எனவே, நேர்மையாளர்களையும், ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமுள்ளவர்களை முன்னிறுத்தி சமுதாய மக்கள் முன்னேற வழிவகைகளை ஏற்படுத்துவோம். 
அன்புடன்,
G. அலெக்ஸ் பென்சிகர், அட்வகேட்
Nadar Co-ordination



Monday 4 January 2016

நாடார்கள் சந்திரன் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய நாட்டையும் சேரநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தனர்.


நமது பாரத நாட்டின் தொன்று தொட்ட குடிமக்களில் நாடார் வகுப்பினர்களும் ஒரு சாரார். பாரதம், பழைய காலத்தில் "அல்ஹின்ட்", என்று அராபியர்களால் அழைக்கப்பட்டது, பைபிள் தோன்றிய காலத்தில், அவர்கள், நான்கு ஆறுகளின் மக்கள் என்று அறியப்பட்டனர். ஆனால், அவர்கள் தோற்றம், தெற்குப்பகுதியாம் "குமரிக்கண்டம்" என்பதாகும்.


சேரநாடு, வில்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு அவர்கள் நாடார்கள் அல்லது சாணார்கள் என்று அறியப்பட்டனர். அவர்களது சின்னம், பனைமரத்தின் பூ விக்ரம சோழ உலாவில், ஒட்டக்கூத்தன் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை என்பவரை வில்லவன் அல்லது நாடார், என்ற குறிப்பிடுகின்றார். 


துரதிர்ஷ்டவசமாக பண்டைத்தமிழர்களின் வரலாறு, வரலாற்றுக்கால நாடார்களை, அன்னார் தம் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, திருத்தி, புனைந்து, படை எடுத்து வந்த ஆரியர்களின் பெயருக்குப்புகழ் சேர்த்திட, ஏற்படுத்திவிட்டது. இத்தகைய மாற்றங்கள், பெரும்பகுதியும், முகலாய படையெடுப்பிற்கும் பின்னர், ஆரியப் பார்ப்பனர்களின் துணை கொண்டு செய்யப்பட்டவை ஆகும். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, ஆதியில் நாட்டை ஆட்சி செய்து வந்த வகுப்பினரை- நாடார்களை அவர்தம் பெயர்க்கு இருந்த பெருமையைக் குறி வைத்து அழித்து, ஒழித்து விட்டனர்.

         நாடார்கள் சந்திரன் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய நாட்டையும் சேரநாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தனர்.




12-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இங்கே வாழ்ந்த நாடார்கள் தங்களின் இந்துக் கோயில்களுக்கு இருந்த மிகப்பெரும் சொத்துக்கள் அனைத்தும். பார்ப்பனர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டுவிட்டன. நாடார்களின் வீழ்ச்சி தொடங்கியது. பாரத பூமியில் முழுவதும் பன்மொழிப் புரட்சிகள் ஏற்பட்ட போது, தமிழ் நேர்மையற்ற முறையில் பின்னடைவுக் கொணரப்பட்டு, சமஸ்கிருதம், வலுவான இடத்தைப் பெற்றுவிட்டது. இவ்வாறாக, தஞ்சாவூர் - தமிழ் நாடார்களின் முக்கியப்பகுதியின் புகழ் மங்கச் செய்யப்பட்டுள்ளது. வலங்கைமாலை, நாடார்களின் ஓலைச்சுவடிகள் ஒன்று. அவர்களது வரலாற்றினைப் பேசுகிறது.



15-ஆம் நூற்றாண்டு வாக்கில் நாடார்கள், நாயக்கர்களால், வலிமை குறைக்கப்பட்டனர். ஏனெனில், நாடார்களிடையே உட்பூசல்களும் ஒற்றுமையின்மையும் மேலோங்கி இருந்தன. 1664-ஆம் ஆண்டு, நாடார்கள் அவர்தம் கோயில்களினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். நாடார்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகளால், 13 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமய ஞானிகள், நாடார் ஆதித்தம் செலுத்திய பகுதிகளில், சிறந்த மதமாற்றம் செய்வதற்கு தகுதியான இடமாகக் கண்டனர். இந்த கிறிஸ்தவ ஞானிகள் இல்லா திருப்பின், நாடார் இனம் முற்றிலுமே, ஆரிய ஏஜென்டுகளின் திட்டப்படி அழிக்கப்பட்டிருக்கும்.

சமஸ்கிருத அகராதி நாடார்களை, அரச இனம் (Royal race) எனக்காட்டுகிறது. குமரி மாவட்ட நாடார்களின் அரிய ஆவணங்களாம், வர்ம சாஸ்திரம், காலரி வைத்யம், வானியல் மற்றும் தர்க்க சாஸ்திரம் போன்றவை ஆகும். இவற்றை, சமஸ்கிருத மொழியிலும் காண இயலாது, சிறப்பாக கன்னியாகுமரி வாழ் நாடார்களிடமுள்ள வர்மசாஸ்திரம் போன்றவற்றை வேறு எங்கிலும் காண முடியாது.

16 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளுக்கு, இடைப்பட்ட காலகட்டத்தில், நாடார்கள் ஆரிய முகவர்களால் திணிக்கப்பட்ட புதிய சாதிப் பாகுபாட்டின் கீழ் போராடி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக முன்னேற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்தக் கால கட்டங்களில் தான், மாபெரும் போராட்டங்களாம், "கோயில் நுழைவு இயக்கம்", "மேலாடை அணியும் போராட்டம்", "மனித உரிமை இயக்கம்", பல தலைவர்களால், குறிப்பாக சுவாமி தோப்பு அய்யா ஸ்ரீ வைகுண்டர் மற்றும் மார்ஷல் நேசமணி ஆகியோரால் நடத்தப்பட்டன.

திருவிதாங்கூரில், அக்கால கட்டத்தில், பெண்கள் தமது மார்புப்பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளை மூடிமறைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நாடார்களில் ஆண்கள் தலைப்பாகை கட்டவும், மேல் சாதி மக்களைப்போன்று உடை அணிந்து கொள்ளவும் மறுக்கப்பட்ட சட்டங்கள் இருந்தன. நாடார்கள் வேட்டி கட்டும் போது, முழங்காலுக்குக் கீழே வேட்டி அணிவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தப்பாகுபாட்டினைக் களைவதற்கு 19-ம் நூற்றாண்டில் சுவாமி தோப்பு அய்யா ஸ்ரீ வைகுண்டர் போராடி நாடார்களின் சுயமரியாதையினை நிலைநாட்டப் பாடுபட்டார். 20-ஆம் நூற்றாண்டின் மையகாலத்தில் குமரித்தந்தை திரு. மார்ஷல் A. நேசமணியும், இதற்கு அரும்பாடுபட்டார்.

யூதர்கள் என்னும் ஒரு ஜாதியினர் ஆதி காலத்திலிருந்தே பல இன்னல்கள் அனுபவித்தனர், அழிக்கப்பட்டார்கள் ஆயினும் இன்றளவிலும் ஒரு நாட்டை ஆட்சி செய்கிறார்கள். ஆயினும் ஜாதியைப் பற்றி கீழ்தரமாக அவர்கள் நினைக்கவில்லை. நாடார் சமுதாயமும் ஒரு பாரம்பரியம் உள்ள தொன்மையான ஜாதி. குமரி கண்டம் அழிந்தது, அத்தோடு அழிக்கப்பட்டதும் நாடார் இனமே. அய்யா ஸ்ரீவைகுண்டர், பெருந்தலைவர் காமராஜர் இன மத பாகுபாடு இன்று எல்லா ஏழைகளுக்கும் கல்வி கொடுப்பதில் உறுதியாக இருந்தார். எல்லா ஏழைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் மூலம் செவிக்கு உணவாக கல்வியோடு வயிற்றுக்கும் உணவை கொடுத்தார்., மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், K.T.Kosalram ஆகியோர் நாடார் ஜாதிக்கு பெருமை சேர்த்தவர்கள். 

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.
இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.
குமரி கண்டம் அழிந்தது, அத்தோடு அழிக்கப்பட்டதும் நாடார் இனமே. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அய்யா ஸ்ரீவைகுண்டர், பெருந்தலைவர், மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், KTK ஆகியோர் நாடார் ஜாதிக்கு பெருமை சேர்த்தவர்கள்.
யூதர்கள் என்னும் ஒரு ஜாதியினர் ஆதி காலத்திலிருந்தே பல இன்னல்கள் அனுபவித்தனர், அழிக்கப்பட்டார்கள் ஆயினும் இன்றளவிலும் ஒரு நாட்டை ஆட்சி செய்கிறார்கள். ஆயினும் ஜாதியைப் பற்றி கீழ்தரமாக அவர்கள் நினைக்கவில்லை. நாடார் சமுதாயமும் ஒரு பாரம்பரியம் உள்ள தொன்மையான ஜாதி. நாடார் சமுதாய பெருமையைக் காப்போம்
அன்புடன்
G. அலெக்ஸ் பென்சிகர்,
அட்வகேட் 
மற்றும்
நாடார் வழக்கறிஞர்கள் சங்க பொதுச்செயலாளர். 
Ph. 94440 22733 ;
98848 22733 :: 
NADAR CO-ORDINATION